குடும்பத்துடன் காரில் செல்லும்போது ஏற்பட்ட கொடூர விபத்து! குழந்தைகள் உட்பட 9 பேர் பலி! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. சென்று கொண்டிருந்த அந்த கார் நிலை தடுமாறி சாலையில் நடுவே உள்ள தடுப்பில் மோதி எதிரே காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

        
 
இந்த விபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி சென்ற காரில் பெண்கள், குழந்தை என ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் , பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் இருந்த ஒருவர் என 9 பெரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 people died in car accident include child


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->