திருப்பூரில் 7 வயது சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்ற முதியவர்.. எட்டிப்பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
திருப்பூரில் 7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூரில் 7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சுப்பாண்ட பாளையத்தை சேர்ந்தவர் ஹனிபா. இவர் அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை யாரும் இல்லாத நேரம் பார்த்து மொட்டை மாடிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
இதனை எதிர்வீட்டில் வசிக்கும் ஒரு பெண் பார்த்துள்ளார். சிறிது நேரத்தில் முதியவருடன் கீழே இறங்கி வந்த சிறுமி அழுதுகொண்டே சென்றதை காண முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அந்த பெண் சிறுமியின் பெற்றோர்களிடத்தில் நடந்த விவரத்தைப் பற்றி கூறியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அழுகைக்கான காரணம் குறித்து கேட்ட பொழுது மாடியில் நடந்த விவரத்தை கூறியிருக்கிறார். உடனே காவல் நிலையத்தில் விரைந்த அவர்கள் ஹனிபா மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்துள்ளனர்.
குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றம் என்பதால் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தாத்தா வயது கொண்ட முதியவர் ஒருவரால் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடத்தில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
English Summary
7 age girl molestation arrested old man