தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து... 5 வயது குழந்தை பலி..! தாய்மார்களே கவனம்..!!
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து... 5 வயது குழந்தை பலி..! தாய்மார்களே கவனம்..!!
பெற்றோர்களின் அலட்சியத்தால் 05 வயது பெண் குழந்தை ஒன்று தண்ணி தொட்டியில் விழந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி நகர் தபால் தந்தி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம். இவரது நந்தினி என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று வீட்டு முன் விளையாடி கொண்டிருந்த நந்தினி, அருகில் இருந்த தண்ணீர் தொட்டி பக்கம் விளையாட சென்றுள்ளார்.
அந்த தண்ணீர் தொட்டி தகரத்தை வைத்து மூடி இருந்த காரணத்தினால், நந்தினி அதன் மீது ஏறி நடந்து சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்த நந்தினி பரிதாபமாக மூச்சு திணறி உயிர் இறந்தார்.
இதனை அறியாத நந்தினியின் தந்தை ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் காணவில்லை என தேடினர். வீட்டில் வந்து தண்ணீர் தொட்டிக்குள் நந்தினி பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுக கத்தி கதறி அழுதார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
5 years old baby killed in water tank accident