வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!. அதிர்ச்சி சம்பவம்!. - Seithipunal
Seithipunal



நாமக்கல் மாவட்டத்தில் காரும்  மினி லாரியும்  நேருக்குநேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்பமடை பகுதியில், தனியாருக்கு சொந்தமான ஆலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றுள்ளது. நாணத்தண்டு பள்ளம் என்ற இடம் அருகே செல்லும்பொழுது, திடீரென வேனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக இயங்க ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து எதிரே வேகமாக வந்த மினிலாரியின் மீது பெரும்சத்ததுடன் வேன் மோதி நின்றுள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 பேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு நடந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 people died in accident. shocked incident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->