வேலூரில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. அவசர ஊர்தி ஓட்டுனரின் வெறித்தனம்..! - Seithipunal
Seithipunal


வேலூரை சேர்ந்த நாகராஜன்(வயது 45) என்பவர், தனியார் மருத்துவமனையில் அவசர ஊர்தி ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார்.  

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் அதே பகுதியை சார்ந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து,  நாகராஜனை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. 

வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜனுக்கு ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறையும், ரூ.5000 அபராதமும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தற்காக 10 ஆண்டுகள் சிறையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பு  அளித்தார்.

இதையடுத்து காவல் துறையினர் நாகராஜனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4year oldgirl raped Ambulance Driver


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->