நான்கு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 17 வருட சிறை தண்டனை..!!
நான்கு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 17 வருட சிறை தண்டனை..!!
வேலுாரை அடுத்த, மேட்டு இடையம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்குத் திருமணமாகி, 3 ஆண் குழந்தைகள் உள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு, நாகராஜ், தான் வசித்து வந்த பகுதியில் இருந்த 4 வயது சிறுமியை அழைத்து, சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி, வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால், அந்த சிறுமி, அழுதபடியே, தன் வீட்டிற்கு வந்து, நடந்ததை, தன் தாயிடம் கூறி உள்ளார். உடனே அந்தச் சிறுமியின் தாயார், வேலுார், மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், நாகராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், நேற்று, டிரைவர் நாகராஜுவிற்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பைக் கேட்டு, நீதி மன்ற வளாகத்தில இருந்தவர்கள், நீதிபதியைப் பாராட்டினர். அந்த சிறுமியின் தாய், தன் குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு, நியாயம் கிடைத்துள்ளது, என்று கூறினார்.
English Summary
4 YEARS OLD GIRL SEXUAL ABUSE