தமிழகத்தில் 381 விவசாய்கள் தற்கொலை.!
தமிழகத்தில் 381 விவசாய்கள் தற்கொலை.!
இந்தியாவில் நாளுக்கு நாள் விவசாய பிரச்சனைகள் அதிகரித்த வருகிறது,இதனால் விவசாய்கள் தற்கொலையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
மத்திய வேளாண் மற்றும் விவசாய்கள் நலத்துறை 2016 இல் மட்டும் தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளது.
தற்கொலைக்கான காரணங்களாவன வறட்சி, கடன் சுமை ஆகிய காரணகளால் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளை காக்க நாடு முழுவதும் விவசாய்கள் போராடத் தொடங்கிவிட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய்கள் நல அமைச்சகம் விவசாய்கள் இறப்பு மற்றும் தற்கொலை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.
அந்த புள்ளி விவரத்தின்படி இந்தியா முழுவதும் 11,370 விவசாய்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இவர்களில் 6,351 பேர் விவசாயிகள், 5,019 பேர் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தபுள்ளிவிவரத்தின் படி மகாராஷ்டிராவில்தான் மிக அதிக அளவில் விவசாய்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம் , தெலங்கானா என முதல் 4 இடங்களில் உள்ளது,இந்த வரிசையில் தமிழகம் 381 விவசாய்கள் தற்கொலையுடன் 5ஆவது இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சிதரும் தகவலும் வெளியாகியுள்ளது.
English Summary
381 farmers attempt suicide and dead