கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து!. 3 பேர் பரிதாப பலி!.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ராஜகிரி கிராமத்தை சேர்ந்த 3 விவசாயிகள் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜகிரியில் இருந்து விராலிமலைக்கு சென்று பின்னர் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது விராலிமலை காணியாளம்பட்டி பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையை அவர்கள் கடந்துள்ளனர். திடீரென திருச்சியிலிருந்து மதுரை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தன்ர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
3 person died in bike accident