மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழை வாங்கிவரும்போது ஏற்பட்ட கோரவிபத்து!. தாய், தந்தை, மாமா 3 பேர் பலி!. - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு நந்தன்நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு  நித்யா என்ற மகளும், இளவரசன் என்ற மகனும் உள்ளனர். நித்யாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்தை அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து ராமலிங்கம், தனது மகளின் திருமண அழைப்பிதழை வாங்கி வருவதற்காக அவரது மனைவி, தனது அண்ணன் தணிகாசலத்தை அழைத்துள்ளார். அவரும், தான் வருவதாக கூறி, தனது மோட்டார் சைக்கிளில் தணிகாசலம் நொச்சிக்காட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தணிகாசலம், ராமலிங்கம், அவர் மனைவி கண்ணகி ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடிக்கு சென்றனர். அங்கு அச்சகத்தில் இருந்து திருமண அழைப்பிதழை வாங்கிக்கொண்டு, 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் நொச்சிக்காட்டிற்கு புறப்பட்டனர்.

        

அப்போது எதிரே கடலூரில் இருந்து குள்ளஞ்சாவடி மார்க்கமாக சென்ற கார், எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் ராமலிங்கம் மனைவி கண்ணகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த தணிகாசலமும், ராமலிங்கமும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் செல்லும் வழியிலேயே ராமலிங்கம் இறந்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் தணிகாசலம் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தணிகாசலமும் இறந்தார்.

இதனையடுத்து நடந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த
குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people died in bike accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->