சூப்பர் மார்க்கெட்டில் பாலியல் தொல்லை... விஷம் குடித்த 3 சிறுமிகள்.! மாத்தூரில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மாத்தூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மணலி, மாத்தூர் பகுதியில் செந்தில் குமார் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (62) வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த மூன்று சிறுமிகளுக்கு, சந்திரசேகரன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் மூன்று சிறுமிகளும் சேர்ந்து, சந்திரசேகரனுக்கு பேதி மாத்திரை கலந்து டீ கொடுத்துள்ளனர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சந்திரசேகரன், கடை உரிமையாளர் செந்தில் குமாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடை உரிமையாளர் முழுமையாக இது பற்றி விசாரிக்காமல் மூன்று 3 சிறுமிகளையும் தாக்கி, வேலையை விட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனவேதனை அடைந்த மூன்று சிறுமிகளும் தற்கொலை செய்து கொள்வதற்காக சவுகார்பேட்டை பகுதியில் உள்ள கல்யாண மண்டபம் அருகே விஷம் குடித்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சடைந்து விசாரித்தபோது, சூப்பர் மார்க்கெட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, மூன்று சிறுமிகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சூப்பர்வைசர் சந்திரசேகரன் மற்றும் கடை உரிமையாளர் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 girls poisoned due to sexual harassment in the supermarket in manali


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->