திருவள்ளூர் அருகே பரபரப்பு! 28 குடும்பங்கள் கருணை கொலை செய்யக்கோரி போராட்டம்!
திருவள்ளூர் அருகே பரபரப்பு! 28 குடும்பங்கள் கருணை கொலை செய்யக்கோரி போராட்டம்!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வல்லம்பேடு கிராமத்ததை சேர்ந்த 28 குடும்பங்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை கொடுத்தனர். அதில் 28 குடும்பங்களை சேர்ந்த எங்களை கருணைக்கொலை செய்ய கோரி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 2016 ம் ஆண்டு வல்லம்பேடு கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருதரப்பினர் இன்னொரு தரப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடந்து சில நாட்களுக்கு பிறகு, தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யபட்டனர்.
அன்றுமுதல் இன்றுவரை இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை இல்லமால் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட அந்த ஒருபிரிவினரை சேர்ந்த 28 குடும்பங்கள், தங்கள் எங்கள் ஊரில் வாழ வழியில்லை என்றும், எங்களை கருணை கொலை செய்த கோரியும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
English Summary
28 FAMILY WANT TO Kindness Kill