சிறுமியை ஏமாற்றி கற்பமாக்கிய இளைஞர் கைது
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர் ஒருவர் கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் மனமுடைந்து ஆசிட் குடித்த சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (23) அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சசிகுமார் பலமுறை அவரை பலாத்காரம் செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானாள்.இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சிறுமி ஆசிட்டை குடித்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிறுமியின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சசிகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதனை அடுத்து நீதிமன்றம் அவரை சிறையிலடைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
23 years man arrest for 16 years young girl found to be pregnant near chennaai koyambedu