2 வயது குழந்தையை கிட்ஸ் பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற தாய், தந்தை! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!
2 years baby died in kids school
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரசாத் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுகந்தியும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு 2 வயதில் ஆண்குழந்தை இருந்துள்ளது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்க்க யாரும் இல்லாததால், அவர்களது குழந்தையை ஒரு தனியார் குழந்தைகள் பள்ளியில் சேர்த்தனர்.
வழக்கம்போல் நேற்று காலை கணவன், மனைவி இருவரும் குழந்தையை மழலையர் பள்ளியில் விட்டுவிட்டு, குழந்தைக்கு சாப்பாடும் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அந்த குழந்தைக்கு மதிய உணவு கொடுக்கும்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தையை, மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் பள்ளியின் நிர்வாகி பிரசாத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பள்ளி நிர்வாகி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரசாத் மற்றும் அவருடைய மனைவி இருவரும் பதறி அடித்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களது குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்ட இருவருமே கதறி அழுதுள்ளனர்.
குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத கணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இன்றைய காலத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், பல கணவன், மனைவி இவ்வாறு சிறு குழந்தையை காப்பகத்தில் விட்டுச்செல்கின்றனர். ஆனால் தாயின் அரவணைப்புக்காக ஏங்கும் சிறு குழந்தை காப்பகத்தில் இருப்பதால் அவர்களின் மனநிலையும் பாதிக்கும் எனவும் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.
English Summary
2 years baby died in kids school