வாயில் குண்டடி..! பேச்சு இல்லை..! ஒரே ஒரு பெரு மூச்சு விட்டாள்..! இறந்த பெண்ணின் தோழி கண்ணீர் பேட்டி..!!
வாயில் குண்டடி..! பேச்சு இல்லை..! ஒரே ஒரு பெரு மூச்சு விட்டாள்..! இறந்த பெண்ணின் தோழி கண்ணீர் பேட்டி..!!
இந்தியாவையே பரபரப்படைய வைத்த துாத்துக்குடி, துப்பாக்கி சூடு சம்பவம், அனைத்து தரப்பு மக்களையும், அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்காக, நாடே அழுது கொண்டிருக்கிறது.
கடந்த 22-ஆம் தேதி, நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், வாயில் குண்டடி பட்டு, இறந்து போன 17 வயது மாணவி, ஸ்நோலினுடைய தோழி, இன்பென்டா (வயது 22) அன்று நடைபெற்ற சம்பவத்தைக் கண்ணீருடன் விளக்கினார்.
இந்த போராட்டத்தில், கலந்து கொண்டு, கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, என் தோழி என்னுடன் வந்தாள். அவள் என்னை விட வயதில் சிறியவள். நாங்களும், எங்கள் பகுதியைச் சேர்ந்த சில பெண்களும், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பாகச் சென்ற போது, திடீரென்று, துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது.
நான், அந்த சத்தத்தைக் கேட்டு, அதிர்ந்தேன். என் தோழிக்கு என்னவாயிற்று? என்று பார்ப்பதற்காகத் திரும்பினேன். அப்போது, என் தோள் பட்டையில் பலத்த அடி விழுந்தது. இதனால், நான் நிலை குலைந்து தடுமாறி, பின் எழுந்தேன்.
அடுத்த நொடி, என் தோழி ஸ்நோலின் வாயில் குண்டடி பட்டு, ரத்தம் கொட்ட கீழே விழுந்தார். அவளிடம் எந்த பேச்சும் இல்லை. ஒரே ஒரு பெரு மூச்சு விட்டாள். நான் அவளைத் தனியாகத் துாக்க இயலாமல், பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
ஆனால், அவள் இறந்து விட்டதாக, டாக்டர்கள் கூறினர், என்று அழுதபடி சொன்னார். இன்னும், அந்த சோகத்தில் இருந்து விடுபடாமல் இருக்கிறார், இன்பென்டா.
English Summary
17 YEARS OLD GIRL KILLED POLICE