புதுவருடத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?! 14.04.2019 இன்றைய ராசிபலன்!!  - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் செய்திபுனலின் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 

மேஷம்: வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு குடும்பம் தொடர்பான வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரிஷபம்: டும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. கு வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வி.ஐ.பி.களின் அறிமுகமும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். 

மிதுனம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஏற்பட்ட அபவாதம் நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணியின் காரணமாக சிலரைச் சந்திக்கச் செல்லக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும்.

கடகம்: சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்: நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. 

கன்னி: வியாபாரத்தில் பங்குதாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.  சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். 

துலாம்:பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்படக்கூடும்.  சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற் கொள்ள நேரிடும்.  சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் பிற்பகலுக்கு மேல் ஈடுபடுவது நல்லது.

விருச்சிகம்: வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் வகையில் சில பிரச்னை கள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. வீட்டில் பராமரிப்புப் பணிகள் சற்று சோர்வை ஏற்படுத்தும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.

தனுசு: இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சிறு தடை ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.  மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். 

மகரம்: அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடவும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவு வதாக இருக்கும். மற்றபடி வீட்டில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.  தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக் கூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சமாளிப்பீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். 

கும்பம்: குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபர ணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மீனம்: பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக இருப்பது நல்லது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு, தண்ணீர் விஷயத்தில் கவனம் செலுத்தவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளை யோசித்து எடுப்பது நல்லது. கடன்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14.04.2019 today Rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->