அவருக்கு டி20 போட்டியில் விளையாட தகுதியில்லை.!! மீண்டும் எழுந்துள்ள சர்ச்சையால் பரபரப்பு.!!
மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை
தோனி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவதில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வி.வி.எஸ் லட்சுமண் மற்றும் அகர்கர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இதற்கு தோனிதான் காரணம் என்று விவிஎஸ்.லட்சுமண் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் கூறியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து லட்சுமண் கூறியதாவது:-
தோனி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறார். அதை மறுப்பதற்கில்லை.
ஒருநாள் போட்டிகளில் தோனியின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
ஆனால் டி20 போட்டிகளில், அவரின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை. எனவே, தோனி இளைஞர்களுக்கு தனது வாய்ப்பை விட்டு கொடுக்கலாம்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி சிறப்பாக இருக்கும் என்று லட்சுமண் கூறினார்.
அதே போல், முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் கூறுகையில், தோனி விராட் கோலியுடன் இணைந்து ரன் குவித்திருந்தால் இந்தியா எளிதில் வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால் அவர்கள் அதை செய்ய தவறி விட்டனர் என்று கூறியுள்ளார்.
தோனி ஓய்வு பெற வேண்டும் என்று ஏற்கனவே சிலர் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், மீண்டும் அது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
English Summary
VVS Laxman said Ms dhoni not eligible to play in the T20 match