கோப்பை யாருக்கு? போட்டி நடக்கவிருக்கும் மைதானம் யாருக்கு ஏற்றதாக இருக்கும்?.. நடக்கவிருக்கும் ஐபிஎல் இறுதி போட்டி!.
11வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதிப்போட்டி இன்று மும்பை வாகன்டே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
11வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதிப்போட்டி இன்று மும்பை வாகன்டே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், 6 அணிகள் வெளியேறி இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.
இன்று நடக்கும் போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சன்ரைசர் ஹைதராபாத் சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. கடந்த 22-ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கான முதல் தகுதி போட்டி நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் சென்னை சுபெர்கின்ஹ்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நேரடியாக நுழைந்தது.
ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றது. ஆனால், இரண்டாவது தகுதி சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்து விட்டது. ஆல்ரவுண்டராக ரஷித் கான் ஐதராபாத்தில் கலக்கி வருகிறார். அவர் இன்றைய போட்டியில் சிஎஸ்கே-வுக்கு சவாலாக விளங்குவார். அவருடைய ஆட்டத்தை இன்று ஐதராபாத் அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுவரை நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி, சென்னை அணியுடன் மூன்று ஆட்டத்தில் ஆடியுள்ளது. ஆனால் மூன்று போட்டிகளிலும் சென்னை அணிதான் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி இந்த கோப்பையை கைப்பற்றி ஆகவேண்டும் என்ற முயற்சியோடு ஆடி வருகிறது. இன்று நடக்கவிருக்கும் மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 8 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 4 முறையும், 2 வது பேட் செய்த அணி 4 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்த போட்டி இரு அணிகளுக்குமே சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The IPL final will be held at Wagunde Stadium in Mumbai today.