இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிரபல சிக்ஸர் வீரர்: அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள ரசிகர்கள்: அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 'மறைந்தாலும் சூரியன் நாளை உதிக்கும்' என்று இந்திய அணியின் தேர்வுக் குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இருபது ஓவர் தொடரை இந்திய அணி (2-1) கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) என கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இத்தொடரின் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

அதில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மாவின் இடம் பெறவில்லை.இதனால் ரோகித் இந்திய அணியின் தேர்வு குழுவை குத்தி காட்டும் வகையில், மறைந்தாலும் மறுநாள் சூரியன் உதிக்கு என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரோகித் இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் கவலையில்லை என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sun will rise again tomorrow


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->