இலங்கை பந்து வீச்சாளர் விளையாட தடை! ஐசிசி அதிரடி நடவடிக்கை!
இலங்கை பந்து வீச்சாளர் விளையாட தடை! ஐசிசி அதிரடி நடவடிக்கை!
இலங்கை அணியின் முக்கிய சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவர் அகில தனஞ்சயா. இவர் இலங்கை அணியின் தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவர் முக்கிய இடம் வகித்து வருகிறார். ௨௫ வயதான இவர் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் 30 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடியது. அங்கு பங்கேற்ற இலங்கை அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணி, அப்போது அகில தனஞ்சயா பவுலிங் செய்தார். அவரது பவுலிங்கை நடுவர்கள் கவனித்தபோது சந்தேகமடைந்தனர். பின்னர் நடுவர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில் தனஞ்சயாவின் பந்து வீச்சை ஆய்வு செய்ய ஐசிசி முடிவெடுத்தது.
அதன்படி பிரிஷ்பேனில் உள்ள நேஷனல் கிரிக்கெட் சங்கம் அவருடைய பந்து வீச்சை ஆய்வு செய்தது. அகில தனஞ்சயா பந்து வீசும்போது பெரும்பாலான நேரங்களில் ஐசிசி வரையறுத்துள்ள அளவான 15 டிகிரிக்கு மேல் விளைவது தெரியவந்தது. இதையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தன்னுடைய பந்து வீசும் முறையை மாற்றிய பின் சர்வதேச போட்டிகளில் பந்து வீசலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதியளித்துள்ளது.
English Summary
Sri Lankan bowler banned to play ICC action action!