ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தென்னாப்பிரிக்க வீரர்! இலங்கை ஆல் அவுட்!
ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தென்னாப்பிரிக்க வீரர்! இலங்கை ஆல் அவுட்!
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி பெற்ற நிலையில் 2-வது டெஸ்ட் இன்று கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினார்கள்.
முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சு புயல்கள் ரபாடா, ஸ்டெயின், லுங்கி நிகிடி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. இதனால் தொடக்க ஜோடி சிறப்பாக விளைாடி அரைசதம் அடித்தனர்.
இலங்கை அணி தரப்பில் குணதிலகா 57 ரன்னிலும், கருணாரத்னே 53 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 60 ரன்கள் அடித்தும் ஆட்டமிழந்தனர். இலங்கை வீரர்களை நிலைத்து நின்று விளையாட விடாமல் சுழல்பந்துவீச்சாளர் மகாராஜ் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக் கொண்டே இருந்தார்.
முதல்நாள் ஆட்டம் முடிவில் இலங்கை அணி 86 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. அகில தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து இன்று ஆடிய இலங்கை அணியின் இறுதி ஜோடி தென்னாபிரிக்க அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. இறுதியில் ஹெராத் அவுட்டாக இலங்கை அணி மொத்தம் 338 ரன்களை குவித்துள்ளது. மகாராஜ் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
English Summary
south africa spin bowler got 9 wickets in single innings