இங்கிலாந்து அணி வீரர்களை தனது சூழல் பந்தின் மூலம் திணறடிப்பார் குலதீப் யாதவ்.! பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் கணிப்பு.!!
இங்கிலாந்து அணி வீரர்களை தனது சூழல் பந்தின் மூலம் திணறடிப்பார் குலதீப் யாதவ்.! பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் கணிப்பு.!!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள, இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது.
இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை, இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல் முறையாக டெஸ்ட் அணியில், இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த பேட்டியில், ‘ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், குல்தீப் யாதவின் மணிக்கட்டு சுழற்சியை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப சிறப்பாக விளையாடினார்.
மேலும், அவரை போல் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் குல்தீப்பின் சுழலை சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆடுகளம், வெயிலில் காயும் போது குல்தீப் யாதவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். பெரும்பாலான வீரர்கள் நிச்சயம் தடுமாறுவார்கள். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உலர்ந்து காணப்பட்டால் இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது எனவும் சச்சின் கூறியுள்ளார்.
English Summary
sachin tendulkar talk about kuldeep yahav bowling