சச்சினின் பரபரப்பு வேண்டுகோள் என்ன ஆனது.!
சச்சினின் பரபரப்பு வேண்டுகோள் என்ன ஆனது.!
இந்தியாவின் சாதனை நாயகன் சச்சின் BCCI க்கு வேண்டுகோள் ஒன்று விடுத்திருந்தார்,அதன் விவரம்..
வெஸ்ட்இண்டீஸ் அணி வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் 2 டெஸ்ட் உட்பட 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது.அதில் ஒரு ஒருநாள் போட்டி கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நவம்பர் 1–ந் தேதி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து.
தற்போது கொச்சி மைதானத்தில் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து , ஐ.எஸ்.எல். கால்பந்து போன்ற போட்டிகள் நடைபெற்றுள்ளன.தற்போதுதான் கொச்சி ஸ்டேடியம் உலக தரம் வாய்ந்த கால்பந்து மைதானமாக மாறி வருகிறது. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்தினால் மைதானம் சேதம் அடையும்.இதனால் இந்த போட்டியை கேரள மாநிலத்திலேயே அமைந்துள்ள மற்றொரு மைதானமனா திருவனந்தபுரத்துக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதனை அடுத்து அவரின் கோரிக்கையை ஏற்று போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்ற கேரளா மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது.இதில் கேரள மாநில விளையாட்டுதுறை அமைச்சர் மொய்தீன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
English Summary
sachin requested to Indian cricket association