தோனி காலத்திற்கும் விளையாட முடியுமா? கங்குலி காட்டம்!
Rishabh Pant should Replaced MS Dhoni in future said ganguly
டெல்லி அணியின் ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சவுரவ் கங்குலி தோனி குறித்து பேசியுள்ளார். அதில் தோனி காலத்திற்கும் இந்திய அணிக்காக விளையாடிக்கொண்டே இருக்கப்போவதில்லை. அவருக்கு பிறகு தற்போது டெல்லி அணியில் இருக்கும் ரிஷப் பந்த் தான் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தின் பெயர் இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே உலகக்கோப்பைக்கான காத்திருப்போர் பட்டியலில் ரிஷப் பந்த் இணைக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்த போது, தற்போது அணியில் இடம்பெற்று இருக்கும் தோனியும், தினேஷ் கார்த்திக்கும் காலத்திற்கும் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்க போவதில்லை என்றும், அவர்களுக்கு பிறகு ரிஷப் பந்த் சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இன்னும் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டால் இன்னும் 15-16 ஆண்டுகளுக்கு விளையாடுவார் என்பதால் இந்த உலகக்கோப்பை அணியில் அவர் தேர்வு செய்யப்படாதது என்பது அவருக்கு பெரிய பின்னடைவாக இருக்காது என்றும் கங்குலி கூறியுள்ளார்.
ரசிகர்கள் தோனி என்ற மனநிலையில் இருந்து அடுத்து ரிஷப் பந்த் தான் என்ற மனநிலைக்கு வர வேண்டும் என்பதை கங்குலி சொல்லாமல் சொல்லியுள்ளார். கங்குலி கண்டுபிடித்த தோனி இந்தியாவிற்காக 15 வருடங்களாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rishabh Pant should Replaced MS Dhoni in future said ganguly