சிக்ஸர் மன்னன் இல்லாமல் திணறி போன பஞ்சாப்! ஐபில் 2018 மோசமான ஆட்டம்! - Seithipunal
Seithipunal


ஐபில்-லில் இன்று டெல்லியில் நடக்கும் 22வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் காம்பிர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 

இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, கருண் நாயர் 34 ரன், ராகுல் 23 ரன், மில்லர் 26 ரன், அகர்வால் 21 ரன், , யுவராஜ் சிங் 14 ரன்கள் என சொற்ப ரங்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆட்ட இறுதியில் கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த ஐபில்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மிகவும் மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. மேலும் முதல் 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 68 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சிக்சர் மன்னன் கெயிலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கெயில் கடந்த போட்டிகளில் இரண்டு அரை சதங்களும், ஒரு சதமும் விளாசினார் இதனால் அந்த அணி முதல் 10 ஓவர்களில் முறையே 99, 84, 115, 82, 117 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஆட்டத்தில் களத்தில் கெயில் இருந்தால் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab suffered with out Sixes king IPL 2018 worst game


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->