சென்னையில் திடீர் பதற்றம்... ஒன்று கூடிய ரசிகர்கள்.!! தடியடி நடித்திய காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


12வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.

இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி அதிகபட்சமாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக குவாலிபயா் சுற்றை உறுதி செய்துள்ளது. 

இந்நிலையில் சென்னை அணி அடுத்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், வெள்ளிக் கிழமை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணி, மும்பை அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. டிக்கெட் வாங்குவதற்காக நேற்று இரவே மைதானத்தின் முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், காவல் துறையினரை திருப்பி அனுப்பிவிட்டனர். மேலும் இன்று அதிகாலை முதலே டிக்கெட் பெற மைதான வாயிலில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். ரசிகர்களை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

சிலர் கூட்டத்தினுல் புகுந்ததாக செய்தி பரவியதைத் தொடங்கி ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களை ஒழுங்குப்படுத்த தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police lathi charge for csk fans


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->