ஓய்வெடுத்துவிட்டு வந்து மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய மூத்த வீரர்! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் நடைபெற்று வரும் டென்னிஸ் தொடரான ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் கைர்ஜியோசை வீழ்த்தி மூத்த வீரரும் முன்னாள் நம்பர் 1 வீரருமான  சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்தபோட்டியின் முதல் செட்டை கிர்கியோஸ் 7-6 (7-2) என அட்டகாசமாக விளையாடி போராடி கைப்பற்றினார். ஆனால் அதன்பின் சுதாரித்து கொண்ட  ரோஜர் பெடரர் இரண்டாவது  செட்டை 6-2  என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். மீண்டும் மூன்றாவது செட்டில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற  இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு இறுதி செட்டையும் பெடரர் 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார். இதன்மூலம் 2-1  செட்கணிக்கில் வெற்றி பெற்று பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்த போட்டித்தொடரின் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை ரோஜர் பெடரர் எதிர்கொண்டு விளையாடுகிறார். இந்நிலையில், நேற்றைய அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெடரர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓப்பனில் காயம் காரணமாக விளையாடாமல் ஒய்வு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one more time he move to world no 1


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->