கொடி பிடிக்கிறார் PV சிந்து! கௌரவத்தை வழங்கிய ஒலிம்பிக் இந்தியா!
கொடி பிடிக்கிறார் PV சிந்து! கௌரவத்தை வழங்கிய ஒலிம்பிக் இந்தியா!
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது அனைத்து நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணி வகுப்பு நடக்கும். இதில் பி.வி.சிந்து இந்தியா சார்பில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவரை தொடர்ந்து இந்திய வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து செல்வர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2016-இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்துக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ராஜயவர்தான் ரத்தோர், அபினவ் பிந்திரா, விஜயகுமார் ஆகியோர் தேசிய கோடியை ஏந்தி சென்றது குறிப்பிடதக்கது.
English Summary
national flag will take by pv sindhu on inauguration function of cwg 2018