மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது!
Madurai Jallikattu Sports
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.
இதனிடையே, மாவட்டவாரியாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி - அவனியாபுரம், 16ம் தேதி - பாலமேடு, 17ம் தேதி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது
அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில், தச்சங்குறிச்சியில் 14ஆம் தேதி, வடமலை புதூரில் 18ஆம் தேதி, கீழப்பனையூரில் 19ஆம் தேதி, விராலிமலையில் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மதுரையில் வரும் 17-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது. காளைகளுக்கான முன்பதிவில் முதற்கட்டமாக 600 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கால்நடைத்துறை இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையில், 5 கால்நடை மருத்துவக் குழுக்கள் மற்றும் வருவாய் துறையினர் முன்பதிவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Madurai Jallikattu Sports