திட்டமிட்டே தீர்த்துகட்டிய நியூசிலாந்து...இன்று இடைப்பட்ட நேரத்தில் இந்திய அணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..?
இந்தியா - நியூசிலாந்து இடையில் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையினால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையில் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையினால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி, திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்ஃபீல்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.
தொடரில், 1 – 1 என்று சமநிலையில் இருப்பதால், கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் ஆயத்தமாகி உள்ளன. ஆனால், போட்டியை நடத்துவதற்கு மைதானம் தான் இன்னும் ஆயத்தமாகவில்லை.
அதாவது, இன்று காலை முதல் பெய்து வரும் மழையால், மைதானத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது.
அவை இப்போது சுத்தம் செய்யப்பட்டுவிட்டாலும், திட்டமிட்டபடி போட்டி நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இப்போது டாஸ் போடப்பட்டுள்ளதால் போட்டி நடைபெறுவது உறுதியாகி உள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஏனென்றால் மழை பெய்து மைதானத்தின் தன்மை மாறியுள்ளதால் பந்துகள் தாறுமாறாக எகிறும். இதன் மூலமாக் விக்கெட்டுகளை கைப்பற்றி விடலாம் என்று கணக்கு போட்டுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் முடிந்த உடன் மைதானத்தின் தன்மையை அறிந்து பேட்டிங் செய்தால் எளிதாக வென்று விடலாம் என்பதில் நியூசிலாந்து உறுதியாக் உள்ளது.
இருந்த போதிலும் எந்த கள சூழ்நிலைக்கும் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று இந்திய அணி காத்துகொண்டிருக்கிறது.
English Summary
Live Score Cricket, India vs New Zealand, 3rd T20I in Thiruvananthapuram: Rohit, Dhawan Start Innings