இந்திய அணி என்றாலே இப்படித்தான் என்ற சரித்திரத்தையே மாற்றிய இன்றைய நிகழ்வு..? - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து இடையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றி உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையில் திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையினால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முன்னர் இரு அணிகளும் தொடரில், 1 – 1 என்று சமநிலையில் இருப்பதால், கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் ஆயத்தமான நிலையில் களமிறங்கின.

மழையின் காரணமாக ஆட்டம் எட்டு ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்தது.

அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி எட்டு ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு  61 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

மழை பெய்த காரணத்தால் இந்திய  அணியின் பேட்டிங் முடிந்த உடன் மைதானத்தின் தன்மையை அறிந்து பேட்டிங் செய்தால் எளிதாக வென்று விடலாம் என்பதில் நியூசிலாந்து உறுதியாக இருந்த நிலையில் அந்த கனவை தவிடுபொடியாக்கியுள்ளது இந்திய அணி.

எந்த கள சூழ்நிலைக்கும் நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று இந்திய அணி பிரித்து மேய்ந்து விட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

live-score-cricket-india-vs-new-zealand-3rd-t20


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->