கடைசி டி20 போட்டி: ஆஸ்திரேலியாவை பழி வாங்குமா இந்திய அணி!!
கடைசி டி20 போட்டி: ஆஸ்திரேலியாவை பழி வாங்குமா இந்திய அணி!!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த 21 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கியது.
இதில், பிரிஸ்பேனில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, விளையாட இருந்த இந்திய அணி, தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து பெய்து மழை கொண்டே இருந்ததால் இரண்டாவது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது.
இன்று நடைபெறும் மூன்றாவது டி20 போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உத்வேகத்துடன் விளையாட உள்ளது.
முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தாகவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. தொடர்ந்து 7 முறை டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்த போட்டியை சமன் செய்ய இன்று விளையாட உள்ளது.
இன்று நடக்கும் மூன்றாவது டி20 போட்டியிலும் மழை குறுக்கீடு இருந்து, போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி தொடரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
English Summary
Last T20 match: Indian team to blame for Australia