இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்த கே.எல் ராகுல்.!! காவஸ்கர் எப்படி பாராட்டினார் தெரியுமா?
முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்த கே.எல் ராகுல்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் துவங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, ஷிகர் தவானும், கே.எல் ராகுலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர்.
ஆனால் களம் இறங்கிய முதல் பந்திலேயே, கே.எல் ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
தற்போது இவர் தனது டக் அவுட் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்.
அதன்படி இந்திய அணியில் VVS லட்சுமண், டபுள்யூ.வி ராமன், கவாஸ்கர் போன்ற சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் அவுட் ஆகி இருக்கின்றனர்.
தற்போது, அந்த டக் அவுட் லிஸ்டில் கே.எல் ராகுல் இணைத்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறும் போது.., ''எங்களுடைய கிளப்பில் இணைந்ததற்கு நன்றி'' என்றார்.
கவாஸ்கர் மட்டும் மூன்று முறை டெஸ்ட் போட்டிகளில் முதல் பந்தில் அவுட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Inida vs Srilanka test match in kolkata