சிக்கலான விஷயத்தில் சிக்கிய ஹார்டிக் பாண்டியா! நீதிமன்றம் வழக்கு போட உத்தரவு!
சிக்கலான விஷயத்தில் சிக்கிய ஹார்டிக் பாண்டியா! நீதிமன்றம் வழக்கு போட உத்தரவு!
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதய நட்சத்திர ஆட்டக்காரர்களில் முக்கியமானவர் ஹர்திக் பாண்ட்யா. எல்லா போட்டி தொடர்களிலும் விளையாடுவதால் சோர்வு ஏற்படும் எனக்கூறி சமீபத்தில் முடிந்த முத்தரப்பு தொடரில் ஒய்வு அளிக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக மும்பை அணிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார் என அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் அம்பேத்கர் பற்றி கருத்து தெரிவித்த வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் அவர் மீது வழக்கு தொடுக்க ஆணை வழங்கியுள்ளது.
இடஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் அம்பேத்கர் என ஹார்டிக் பாண்டியா ட்விட்டரில் தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அந்த சர்ச்சைக்குரிய அந்த ட்விட் அவருடைய அதிகாரபூர்வ பக்கத்தில் இல்லை. ஒருவேளை பிரச்னை எல்லை மீறியதாக நினைத்து நீக்கிவிட்டாரோ என்னவோ!
English Summary
jodhpur court file case against hardik pandya