பயிற்சி ஆட்டத்தின் போது பலத்த அடிபட்டு சுருண்டு விழுந்த இந்திய வீரர் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal



ஐபில் 2019 தொடர் வரும் மார்ச் 29ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்தநிலையில் அணைத்து வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி அதன்மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து சில போட்டிகளில் விளையாடினார் அசோக் டிண்டா.
 
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்தும் விதமாக தற்போது கொல்கத்தாவில் நடைபெறும் சையது முஸ்தாக் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

     

அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்து திடீரென அசோக் டிண்டாவின் தலையில் பலமாக தாக்கியது. இதனால் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார், பேட்ஸ்மேன் அடித்த பந்து தலையில் பட்டு பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்திய வீரர் அசோக் டிண்டா.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அசோக் டிண்டாவிற்கு பெரிதான பாதிப்பு ஒன்றும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian cricket palyer admitted in hospital


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->