ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியே வெல்லும்! - வேகப்பந்து வீச்சாளர் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியே வெல்லும்! - வேகப்பந்து வீச்சாளர் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது.இதில், கடந்த 21 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கியது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் பெற்ற வெற்றியின் மூலம் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் தொடங்கும் முன்பு இந்திய அணி, ஆஸ்திரேலியா 11 அணியுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. பின்னர் பயிற்சியின்போது, பேட்டியளித்த இந்திய வீரர் இஷாந்த் சர்மா பேசியதாவது, இந்திய அணியின் தற்போதைய நிலை என்னவென்று தெரியும். நீண்ட நாட்களுக்கு பின் ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளோம். நாங்கள் யாரையும் குறைவாக நினைக்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் வென்றாக வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே யாரும் தனிப்பட்ட முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்க முடியாது. ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்துவது கடினம் என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் வலிமையாக இருக்கிறோம்.இந்திய அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தோடு, உண்மையான ஆட்டத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏனென்றால், உண்மையான ஆட்டத்தில் ஆடுகளம் முற்றிலும் மாறி காணப்படும், என்று கூறினார்.
English Summary
India win the Test series against Australia - Indian pacemaker