நியூசிலாந்து அணியின் கொலைவெறி ஆட்டம்.! விழிபிதுங்கும் இந்திய அணி.!!
IND VS NZ 3RD T20
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிதொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.
இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது, இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டிம் ஷைபெர்ட் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 3 போர் என அதிரடியாக ஆடி 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரரான கொலின் முன்றோ (Colin Munro) தற்போது வரை 32 பந்துகளில் 4 சிக்ஸர், 4 போர் 59 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார். நியூசிலாந்து அணி தற்போது வரை 14.1 ஓவர்களில், 1 விக்கெட் இழப்பிற்கு, 144 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.