என்னுடைய சாதனையை அவர் முறியடித்தால் அவருக்கு இந்த பரிசை கொடுப்பேன்.,வாக்கு அளித்த சச்சின்..!
என்னுடைய சாதனையை அவர் முறியடித்தால் அவருக்கு இந்த பரிசை கொடுப்பேன்.,
இந்திய கிரிக்கெட் அணியை உலகளவில் பெருமை பட வைத்தவர் சச்சின் டெண்டுல்கர் ,இவரது பெருமைகள் மாணவர்களின் பாடபுத்தகங்களில் இடம்பெறும் அளவுக்கு பெருமை பெற்றவர் அவர்.
இவ்வாறு கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இவர் சர்வதேச ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். இதுவரை எந்த இந்திய வீரரும் அவரது சாதனையை உடைத்தது இல்லை.
ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மட்டும் இதுவரை 35 சதம் அடித்துள்ளார். இவ்வாறு சச்சினை போல மிகச்சிறந்த பேட்ஸ்மேனான கோலி விரைவில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சச்சினிடம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உங்கள் சாதனையை விராட் கோலி முறியடித்தால் அவருக்கு 50 ஒயின் பாட்டில்கள் வாங்கி அனுப்புவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சச்சின், 'கோலி என்னுடைய சாதனையை முறியடித்து 50 சதம் அடித்தால் அவருக்கு 50 ஒயின் பாட்டில் அனுப்ப மாட்டேன். அதற்கு பதிலாக அவருடன் அமர்ந்து ஒயின் சாப்பிடுவேன்' என கூறினார்.
English Summary
If you break my record, I will give you the best gift promised by sachin