கிரிக்கெட்வீரர் ஸ்ரீசாந்த் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!
High court judgement in shreeshanth case
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் விளையாடினார். அதில், ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சாவன் உள்ளிட்ட 36 பேர் மீது சூதாட்ட குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அவர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது.
இதன்பின்னர், கடந்த 2015 ஆம் வருடம் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட அனைவரும் டில்லி நீதிமன்றத்தால் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தனது ஆயுட்கால தடையை நீக்க கூறி ஸ்ரீசாந்த் மனு அளித்தார். ஆனால், அதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது
பின்னர், 2017ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். அதில், தடையை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதனை கிரிக்கெட் வாரியம் மீண்டும் மேல்முறையீடு செய்தது.
இன்று உச்சநீதிமன்றம் இதுகுறித்த விசாரணையின் போது, " ஆயுட்கால தண்டனை போன்ற கொடுமையான தண்டனை அனைத்து நேரங்களிலும் அளிக்க கூடாது. சூழ்நிலையை ஆராயாமல் தண்டனை அளிக்கப்பட்டது.
எனவே, உச்சநீதிமன்றம், " இந்த தடைக்குறித்த முடிவிற்கு வாரியம் பரிசீலனை செய்ய வேண்டும். வேண்டுமானால், இதற்கு பதில் வேறு தண்டனை வழங்கலாம். " என தெரிவித்துள்ளது.
English Summary
High court judgement in shreeshanth case