ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் நீக்கத்தின் பின்னணி யார் தெரியுமா? மத்திய அமைச்சர் தலையீட்டால் பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் கலந்து கொண்டு பேசிய போது, பாண்டியா பெண்களை அவதூறாக பேசியதாக பெரும் சா்ச்சை உருவானது. 

இந்த சர்ச்சையை  தொடர்ந்து ஹா்திக் பாண்டியா தனது செயலுக்காக மன்னிப்பு தொிவித்தார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய ஹர்திக் பாண்டியா மட்டும் அல்லாது அவருடன் சென்ற கே.எல்.ராகுலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நோட்டீஸ் அனுப்ப, அவரும் அவசர அவசரமாக மன்னிப்பு கடிதம் எழுதினார். 

ஹர்திக் பாண்டியாவின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்,  ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில்விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தார்

இதனை தொடர்ந்து இருவரும் அணியில் இருந்து உடனடியாக சஸ்பேண்ட் செய்யப்பட்டு நாடு திரும்ப உத்தரவிட்டனர். விசாரணை முடியும் வரை இருவரும் கிரிக்கெட் தொடர்பான எவற்றிலும் பங்குபெறக்கூடாது என்பது உத்தரவாகும். இதனால் இருவரும் பேரதிர்ச்சியில் உள்ளார்கள். 

இந்நிலையில் இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளுக்கு பின் முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி என்று கூறப்படுகிறது.  ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கையை எடுல்ஜி அழிப்பதாக மத்திய  அமைச்சர் பாபுல் சப்ரியோ ட்விட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அமைச்சர்கள் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hardik pandya lokesh rahul issue behind dayana edulji


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->