வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா! ஹர்பஜன் சிங் அசத்தல் டுவிட்!!
harbhajan singh tweet about ipl
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் லீக் முதல் போட்டிக்கான 'டிக்கெட்' விற்பனை இன்று துவங்கவுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இது ஐபிஎல் T20 தொடர் 12வது சீசன் ஆகும். சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான 'நடப்பு சாம்பியன்' சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்காக சென்னை அணியின் வீரர்கள் சென்னையில் முகாமிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தோனி, கேதர் ஜாதவ், ஹர்பஜன் உள்ளிட்ட மற்ற வீரர்கள் அணியுடன் இணைந்துள்ளனர். இதற்கிடையே, அணியை பிரபலப்படுத்தும் வகையில் தற்போது விளம்பர ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
தோனி, கேதர் ஜாதவ், ஹர்பஜன், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் விளம்பர ஷூட்டிங்கில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ள வீடியோ ஒன்றை ஹர்பஜன் சிங் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உள்ளார். அந்த பதிவில் வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா என்று பதிவு செய்துள்ளார்.
English Summary
harbhajan singh tweet about ipl