சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி....இனி கேப்டனாக நீடிப்பது சந்தேகம்!
சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி....இனி கேப்டனாக நீடிப்பது சந்தேகம்!
சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி....இனி கேப்டனாக நீடிப்பது சந்தேகம்!
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நீண்ட நாட்களுக்கு கேப்டன் பதவியில் நீடிப்பாரா என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. விராட்கோலியின் வீரர்கள் தேர்வு குறித்து ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித், விராட்கோலியின் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தென் ஆப்பிரிக்காவின் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசுகையில், கோலியை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த வீரர். ஆனால் சிறந்த கேப்டனா என்றால், உறுதியாக கூற முடியாது.
கோலியை ஆக்கப்பூர்வமாக வழி நடத்தவும், அவரது முடிவுகளை கேள்விகேட்கும் மற்றும் மாற்றும் பயிற்சியாளர் இந்திய அணிக்கு தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய அணியில் மட்டுமின்றி, பி.சி.சி.ஐயிலும் கோலியின் ஆதிக்கம்தான் இருக்கிறது. கோலியை கட்டுப்படுத்தி அவரது முடிவுகளை கேள்விக்குள்ளாக்கும் மற்றும் அவரை அடக்கும் திறன் வாய்ந்த பயிற்சியாளர் தேவை.அப்படி இல்லை எனில் இந்திய அணி பெரும் சரிவை சந்திக்கும் என ராமச்சந்திர குஹா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Graeme smith questions about virat kohlis leadership