ஆஸ்திரேலிய அணிக்கு உதவ களமிறங்கும் முன்னாள் வேக பந்து வீச்சாளர்!
ஆஸ்திரேலிய அணிக்கு உதவ களமிறங்கும் முன்னாள் வேக பந்து வீச்சாளர்!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதனைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கான டெஸ்ட் தொடர்கள் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. அடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
இதனைத்தொடர்ந்து, பல இந்திய முன்னாள் வீரர்களை இந்திய அணியை புகழ்ந்து பாராட்டினார்கள். அத்தனைக்கும் காரணம், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 10 ஆண்டுக்கு பின் மிக அரிதான வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், சுமார் 50 ஆண்டுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்தது.
இந்நிலையில், இரண்டாவது போட்டி நாடாகும் பெர்த் மைதானம் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணிக்கு சாதகம் என ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெர்த் மைதானம் வேக பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு உதவ வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இது குறித்து மிட்சல் ஜான்சன் கூறுகையில், இரண்டாவதுபோட்டி நடக்கும் பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வரப்பிரசாதம். ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு விதத்திலும் செயல்படுவார்கள். அந்த வகையில், ஸ்டார்க் இடம் எனக்கு
பழக்கம் இருப்பதால் அவரை நான் புரிந்து வைத்துள்ளேன். அதனால், அவருக்கு சில யோசனைகளை வழங்கினேன். தற்போது அவர் ஏதோ குழப்பத்தில் இருப்பதாக உணர்கிறேன். பெர்த் போட்டிக்கு முன்பு நான் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
English Summary
Former fast bowler to help Australia