இந்திய அணியை திணறவைத்து, நடுங்கவைத்த இங்கிலாந்து அணி!. விராட்கோலியின் சொதப்பல்!.
இந்திய அணியை திணறவைத்து, நடுங்கவைத்த இங்கிலாந்து அணி!. விராட்கோலியின் சொதப்பல்!.
விராட்கோலியின் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்று ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் ஆடத்தொடங்கியது.
அந்த போட்டியில் விராட்கோலி தேவையில்லாமல் புஜாராவை ரன் அவுட்டாக்கிவிட்டார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். மழையின் காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் நாணய டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் விராட்கோலி 23 ரன்களும், அஸ்வின் 29 ரன்களும் மட்டுமே அதிகப்படியாக எடுத்தநிலையில் மற்ற வீரர்கள் சொதப்ப ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 107 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணியை திணறவைத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த போட்டியில் புஜாராவின் ரன் அவுட் மிகப் பெரிய திருப்பு முனையாக இருந்தது. விராட்கோலி மற்றும் புஜாரா நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்தனர்.
அதிலும் புஜாரா ஓட்டம் எதுவுமே அடிக்காமல் ஆடிக்கொண்டிருந்தார், ஆண்டர்சன் பந்து வீசும்பொழுது, புஜாரா அந்த பந்தை அடித்தார் உடனே விராட்கோலி ரன் எடுக்க வருமாறு அழைத்துவிட்டு, அதன் பின் திடீரென்று மீண்டும் கிரீசுக்கே சென்றுவிட்டார். இதனால் தான் புஜாரா தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார் என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றது.
English Summary
england team quickly got all indian wicket in test match