விராட்கோலி பொய் சொல்கிறார் என கூறிய இங்கிலாந்து வீரர்!. அதிர்ச்சியில் இந்திய வீரர்கள்!. - Seithipunal
Seithipunal



இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி,  அங்கு டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியிருக்கும் நிலையில், இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 11-ஆம் தேதி துவங்கவுள்ளது.

இதில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இந்திய அணியின் வெற்றிக்கு தனது தனிப்பட்ட திறமை முக்கியமில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஆண்டர்சன், விராட்கோலி ஓட்டங்கள் எடுக்கிறாரா? இல்லையா என்பது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என கூறியுள்ளார்.

ஆனால் அவர் தற்போது பொய் சொல்லி கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் கோஹ்லி ஓட்டங்கள் எடுப்பது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

ஒரு அணியின் தலைவராகவும் உலகின் சிறந்த வீரராகவும் சாதிக்க வேண்டியது அவரின் கடமை. அதை விட்டுவிட்டு, அணி வென்றால் தனது பேட்டிங் முக்கியமல்ல என சொல்வது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார். இவரின் கருத்தல்நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடர் எதிர்பார்க்க கூடிய ஆட்டமாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England cricket player talking about virat kohli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->