அடுத்த போட்டியில் கலந்து கொள்வாரா தோனி?.! சுரேஷ் ரைனாவின் அதிரடி பதில்.!!
Dhoni will join next match IPL suresh raina says after matching with Hyderabad team
இந்தியா முழுவதும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்., ஐ.பி.எல் கொண்டாட்டமும் நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில்., தோனிக்கு திடீரென முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வலியை அடுத்து நேற்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்க வில்லை.
தோனி இல்லாத நிலையில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக நின்று அணியை வழி நடத்தினார்., இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களின் முடிவில் சுமார் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக டூ ப்ளெசிஸ் 45 ரன்களும்., வாட்சன் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
இவர்களின் பேட்டிங்கை நிறைவு செய்துவிட்டு பின்னர் அடுத்தபடியாக களமிறங்க ஹைதராபாத் அணியை அணியில் பேர்ஸ்டோ சுமார் 61 ரன்களும்., டேவிட் வார்னர் 59 ரன்கள் குவித்து சுமார் 16.5 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றியை அடைந்தனர்.
டோனி இல்லாத சென்னை அணியை ஹைதராபாத் மிக எளிதாக வெற்றி கொண்டது., கடந்த போட்டிகளில் இருந்து தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் சென்னை அடுத்தடுத்து வெற்றியை அடைந்த நிலையில் தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டி நிறைவடைந்த பின்னர் பேசிய சுரேஷ் ரெய்னா இது ஒரு நல்ல சுதாரித்துக் கொள்ள வேண்டிய நிகழ்வு., நாங்கள் போதுமான அளவு ரன்களை சேர்க்கவில்லை முதலில் நல்ல துவக்கத்தை கொடுத்தாலும்., பின்னர் அதனை நாங்கள் பயன்படுத்தவில்லை. தற்போது தோனி நன்றாக இருக்கிறார்.. அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
English Summary
Dhoni will join next match IPL suresh raina says after matching with Hyderabad team