கம்பீரமான போலீசாக மாறிய மாஜி கேப்டன் தோனி.! ஓ.. இதான் சங்கதியா.?!
Dhoni In Police getup
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சமீபத்திய போலீஸ் கெட்டப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகின்றது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2023 இல் நடக்க இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான்கு முறை தோனி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். அதுபோல இந்த வருடம் கடைசி ஐபிஎல் எனும் காரணத்தால் அவர் ஐபிஎல் கப்பை ஜெயிப்பாரா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கின்றது.
இந்த நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கம்பீரமாக காவல்துறை அதிகாரியின் உடையில் இருக்கின்ற ஒரு புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. ஏதோ ஒரு கலவரத்தை கையாள்வது போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது. இது ஏதேனும் விளம்பர படத்தில் தோனி நடித்த போது எடுக்கப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.