உலக சாதனை படைத்த தல தோனி - 3 பாலில் 3 சிக்ஸ்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2024 டி20 தொடரில் நேற்று இரவு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 29வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 250வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை தோனி படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலும் 3 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இதைத் தொடர்ந்து தோனி இந்தப் போட்டியில் அடித்த 20 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னாவுக்கு பின் 5000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். மேலும், இந்த போட்டியில் தோனியின் 500 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் க்ருனால் பாண்டியாவின் சாதனையை சமன் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni cross world record in ipl 2024


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->