மீண்டும் ஏமாற்றம் கொடுத்த மிட்செல் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


17 வது ஐ.பி.எல். தொடரின் 39வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில், டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. அதன் படி சென்னை தொடக்க வீரர்களாக ரஹானே, ருதுராஜ் கெய்குவாட் களமிறங்கினர். 3 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த ரஹானே முதல் ஓவரிலேயே அவுட் ஆனார்.

இதையடுத்து டேரில் மிட்செல் களமிறங்கினார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஏற்கனவே 6 ஆட்டங்களில் ஆடியுள்ள மிட்செல் 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால், மிட்செல் இன்றைய ஆட்டத்தில் 10 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daryl Mitchell out at 11 runs in ipl match against lukno


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->