வெளிநாட்டு பெண்களை பலாத்காரம் செய்த கிரிக்கெட் பிரபலம்.. அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் அதிரடியாக நீக்கம்..! - Seithipunal
Seithipunal


விளையாட்டு வீரரின் ஒழுக்கவிதிமுறைகளை மீறி நடந்ததாகக் கூற இலங்கை அணியின் முக்கிய பேட்ஸ்மேன் தனுசுகா குணதிலகாவை அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான –2-வது டெஸ்ட் போட்டியில் குணதிலகா விளையாடிவரும் நிலையில் இந்த அதிரடி உத்தரவை இலங்கை வாரியம் பிறப்பித்துள்ளது. இந்த சஸ்பெண்ட் உத்தரவு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அமலுக்கு வருவதாக அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வீரரின் ஒழுக்க நடவடிக்கை தொடர்பான விசாரணை நிலுவகையில் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு பெண்கள் இருவர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலைய போலீசாரிடம்  மேற்கொள்ளப்பட்ட அளித்த புகாரை அடுத்து கிரிக்கெட் வீரரின் நண்பர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், வெளிநாட்டு பெண்களை பாலியல் சீண்டல் செய்த சம்பவத்தில் தனுஷ்க குணதிலக்க தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே தனுஷ்க குணதிலக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket player banned for matches


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->