சென்னை எனக்கு இரண்டாவது வீடு : தோணி நெகிழ்ச்சி !
சென்னை எனக்கு இரண்டாவது வீடு : தோணி நெகிழ்ச்சி !
சென்னை எனக்கு இரண்டாவது வீடு : தோணி நெகிழ்ச்சி !
ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் மீண்டும் களம் இறங்க போவது மிகவும் பெருமையாக உள்ளது என மகேந்திர சிங் டோணி கூறியுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டது.இந்த தடை கடந்த டிசம்பர் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதனை அடுத்து, இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாட உள்ளது.இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தல தோனி பேசியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும்,நமக்கு ஆதரவு தருபவர்கள் அதிகமா தான் உள்ளது. இதுவே சென்னை அணிக்கு பலமும்கூட. அதேபோல் நான் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவித்தது சென்னையில் தான்.
இந்த ஆண்டு இளம் வீரர்களை அதிக அளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை அணியில் அஸ்வினை சேர்க்க முயற்சி செய்வோம் சென்னை எனக்கு இரண்டாவது வீடு அணியின்
பலமே ரசிகர்கள் என கூறியுள்ளார்.
English Summary
Chennai is my second home says dhoni